ருத்ராட்சமும் சக்தியும்
ருத்ராட்சம் என்றால் என்ன? ருத்ராட்சம் என்பது தென்கிழக்கு ஆசியாவில் சில பகுதிகளில் வளரும் Elaeocarpus Ganitrus என்ற தாவரவியல் பெயருடைய மரத்தின் விதைகளாகும். "சிவனுடைய கண்ணீர்" என்று கூறப்படும் இந்த ருத்ராட்சத்தின் தோற்றம் குறித்து பல கதைகள் உண்டு. ருத்ராட்சம் எனும் சொல், சிவனைக் குறிக்கும். 'ருத்ரா' எனும் சொல்லில் இருந்தும், கண்ணீரைக் குறிக்கும் 'அட்சம்' எனும் சொல்லில் இருந்தும் வருகிறது. ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? ருத்ராட்சம், ஒருவரது உடல் மற்றும் மன சமநிலையைக் காப்பதற்கு உதவுகிறது. ஆன்மீகத் தேடுதலில் இருப்போருக்கு, ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. பலவகையான உடல், மனம் மற்றும் மனதளவிலான பிரச்சனையால் வரும் நோய்களை குணப்படுத்தக்கூடிய அதன் ஆற்றலால், இது உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சத்தை யார் அணியலாம்? இனம், மதம், நாடு, பாலினம், கலாச்சாரம் ஆகிய பாகுபாடுகள் தாண்டி எவரும் ருத்ராட்சம் அணியலாம். மனநிலையும் உடல்நிலையும் எப்படி இருந்தாலும், ஒருவர் தன் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும் ருத்ராட்சம் அணியலாம். இதனால் பலனடைய குழந்தைகள்,...